கோவையில் தொடங்கப்போகுது அரசு பொருட்காட்சி!

published 9 months ago

கோவையில் தொடங்கப்போகுது அரசு பொருட்காட்சி!

கோவை: கோவையில் அரசு பொருட்காட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசு சார்பில் கோடை காலங்களில் மாவட்டந்தோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கோவையில் ஆண்டுதோறும் இந்த பொருட்காட்சி நடைபெறும் நிலையில், கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24ம் தேதி தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறுகிறது. இந்த பொருட்காட்சியில் பல்வேறு அரசுத் துறைகளின் சாதனை விளக்க அரங்குகள், குழந்தைகளைக் கவரும் ராட்டினங்கள், உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள் அமைக்கப்பட உள்ளன.

மதுரையிலும் இந்த பொருட்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe