மாணவனுக்கு கல்வி நிதி உதவி வழங்கிய நா.கார்த்திக்!

published 8 months ago

மாணவனுக்கு கல்வி நிதி உதவி வழங்கிய நா.கார்த்திக்!

கோவை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையை சேர்ந்த மாணவருக்கு தி.மு.க., செயலாளர் நா.கார்த்திக் கல்வி நிதி உதவியை வழங்கினார்.

கோவை மாநகர், மாவட்ட தி.மு.க., சார்பில் ஏழை மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிங்காநல்லூரை சேர்ந்த மாணிக்கம்-மகேஸ்வரி தம்பதியினரின் மகன் முகுந்தன் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவருக்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக் கல்லூரி படிப்பிற்கான கல்வி நிதி உதவியை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது தி.மு.க.,வின் சிங்காநல்லூர் பகுதி துணைச்செய்லாளர் திராவிட மணி, பகுதி அவைத்தலைவர் கே.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe