உருமாறுகிறது உக்கடம்!

published 8 months ago

உருமாறுகிறது உக்கடம்!

கோவை: கோவை உக்கடம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் மற்றும் தனியார் கட்டடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும் இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

மேலும், போக்குவரத்தை சுலபமாக்க நெடுஞ்சாலைத்துறைக்கு தேவைப்படுவதால் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள 30 கடைகள் கொண்ட வணிக வளாகம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பேருந்துகள் சுலபமாக திரும்பிச் செல்லவும், உக்கடம் பைபாஸ் சாலையில் இருந்து பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் தடையின்றி முன்னே செல்லவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்துகள் வெளியே வரும் போது அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆகிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, மேம்பால கட்டுமான பணிகள் முழுவதும் முடியும் போது உக்கடம் புது வடிவம் பெற்றிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe