கோவையில் போக்சோ வழக்கில் 6 ஆசிரியர்கள் குற்றவாளிகளாக சேர்ப்பு!

published 8 months ago

கோவையில் போக்சோ வழக்கில் 6 ஆசிரியர்கள் குற்றவாளிகளாக சேர்ப்பு!

கோவை: கோவையை அடுத்த ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மீது புகார் எழுந்தது. புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

முன்னதாக, பள்ளியில் மேலும் சில ஆசிரியர்கள் இந்த விவகாரத்தை வெளியே சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டியதாக மாணவி தெரிவித்திருந்தார்.

இதனைதொடர்ந்து போலீசார் இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெற்றோர் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத பள்ளியின் அப்போதைய தலைமை ஆசிரியர் ஜீவா ஹட்சன், மாணவியை மிரட்டியதாக ஆங்கில ஆசிரியர் ஈஸ்வரன், உடற்கல்வி இயக்குனர் ரேகா, அறிவியல் ஆசிரியை சாரதா, இடைநிலை ஆசிரியர் அந்தோணி சிறிய புஸ்பம், ஆசிரியை சண்முகத்தாய் ஆகிய 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இது தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் ஒரே பள்ளியை சேர்ந்த 7 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe