கோவையில் பாலிஷ் செய்ய கொடுத்த ரூ. 15 லட்சம் மதிப்பு நகை அபேஸ்!

published 8 months ago

கோவையில் பாலிஷ் செய்ய கொடுத்த ரூ. 15 லட்சம் மதிப்பு நகை அபேஸ்!

கோவை: கோவை, ஆர் .எஸ். புரம் சுந்தரம், பகுதியைச் சேர்ந்தவர் சாரிபுல் மண்டல் (வயது 28). இவர் அங்கு நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று, தங்க நகைக்கு பாலிஷ் போடும் கடையில் சோம்பூர் டோலி ( வயது24) என்பவரிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம்  தங்கத்தை கொடுத்து பாலிஷ் செய்து தரும்படி கூறியுள்ளார்.

சோம்பூர் டோலி தங்கத்தை வாங்கி உள்ளார். ஆனால் அதன் பிறகு பாலிஷ் செய்து கொடுக்கவில்லை. இது குறித்து சாரிபுல் மண்டல் கேட்டபோது அது தொலைந்து விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு சோம்பூர் டோலி தலைமறைவாகிவிட்டார். அவர் சொந்த மாநிலமான மேற்கு வங்கம் மாநிலம் துர்காவிற்கு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து சாரிபுல் மண்டல் ஆர். எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்
செல்லதுரை, சங்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe