கோவையில் மருத்துவமனையில் ஒருவர் அடித்துக்கொலை!

published 8 months ago

கோவையில் மருத்துவமனையில் ஒருவர் அடித்துக்கொலை!

கோவை: கோவையில் மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைக்குள் புகுந்து இரும்பு கம்பிகளைத் திருட முயன்றதாக தெரிகிறது.

 

இதனிடையே மருத்துவமனை காவலாளிகள் ராஜாவை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் ராஜா மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவலாளிகள் அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் உட்பட 12 பேரை கைது செய்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe