கோவையில் இரு வேறு இடங்களில் சோகம்...

published 8 months ago

கோவையில் இரு வேறு இடங்களில் சோகம்...

கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விஎஸ்கே நகரை சேர்ந்தவர் ரத்தினவேல். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராணி(45). கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரது உடன் பிறந்த தம்பி இறந்து விட்டார். 

அன்று முதல் ராணி தனது தம்பியை நினைத்து மன வேதனையில் இருந்து வந்தார். இதனால் கடும் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த ராணி நேற்று வீட்டில் சாணி பவுடரை குடித்து மயங்கி சரிந்தார். அவரை மீட்ட ரத்தினவேல் ஆட்டோவில் ஏற்றி துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தம்பி இறந்த துக்கம் தாளாமல் அக்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெயிண்டர் தற்கொலை:

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணன்(45). சென்ட்ரிங் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். கடந்த 22ம் தேதி இவரது மனைவி கோகிலா(44), குழந்தைகளை அழைத்து கொண்டு கோத்தகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி தனது மனைவிக்கு போன் செய்த சரவணன் குழந்தையை நன்றாக பார்த்து கொள் என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். 

இதனால் சந்தேகமடைந்த கோகிலா மீண்டும் செல்போனில் அவரை அழைத்த போது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கு போன் செய்த கோகிலா தனது கணவரை வீட்டுக்கு சென்று பார்க்கும்படி தெரிவித்துள்ளார். அங்கு சென்றபோது அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe