கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

published 2 years ago

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவையில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மதிவானன். இவருக்கு அறிமுகமான அறிவொளி நகரைச் சேர்ந்த ரங்கன் (49) என்பவர், குடிசை மாற்று வாரியத்தில் அரசு பணி இருப்பதாகவும், தனக்கு தெரிந்த நண்பரிடம் பணம் கொடுத்தால் அந்த வேலையை வாங்கி விடலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய மதிவானன் பல்வேறு தவணைகளில் ரங்கனிடம் ரூ.12 லட்சத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், அரசு வேலை வாங்கித்தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மதிவானன் இதுகுறித்து குனியமுத்தூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது  வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரங்கன் பண மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe