கோவையில் 232 மையங்களில் தொடங்கியது குரூப் 4 தேர்வு!

published 8 months ago

கோவையில் 232 மையங்களில் தொடங்கியது குரூப் 4 தேர்வு!

கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு 232 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வை 69,737 பேர் எழுதுகின்றனர்.

தேர்வை முறையாக நடத்தும் வகையில் கோவையில் 13 பறக்கும் படைகள், 94 மொபைல் குழுக்கள், தாலுகாவுக்கு ஒருவர் வீதம், 11 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதலே கோவையில் உள்ள தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் குவிந்து வந்தனர். தேர்வு மையங்களுக்குள் வந்த மாணவர்கள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மதியம், 12:30 மணி வரை இந்த  இத்தேர்வு நடைபெறுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe