கோவையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் பக்ரீத் சிறப்பு தொழுகை...

published 8 months ago

கோவையில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் பக்ரீத் சிறப்பு தொழுகை...

கோவை: இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி வளாகத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இயன்றதை பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும், என்ற உயரிய நோக்கோடு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணமும் இந்த மாதத்தில் நடைபெற்று, அங்கு பொதுமக்கள் தங்களின் தொழுகை கடமையை நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிக் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட மக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.

தொழுகை முடிந்த பின்னர் ஆடு மாடுகளை பலியிட்டு உற்றார் உறவினர்களுக்கு வழங்குவர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe