கோவையில் பிடிபட்ட ஓநாய் பாம்பு!

published 8 months ago

கோவையில் பிடிபட்ட ஓநாய் பாம்பு!

கோவை: கோவையில் தென்பட்ட அரிதான வெள்ளிக்கொல் வரையான் பாம்பை (ஓநாய் பாம்பு) பொதுமக்கள் ஆச்சரியமாகப் பார்த்துச் சென்றனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாம்பு பிடி வீரரான சித்ரன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது.

தகவலின் அடிப்படையில் சென்ற சித்ரன், வீட்டில் வைக்கப்பட்ட பூந்தொட்டியில் இருந்த பாம்பை லாவகமாகப் பிடித்தார்.

அந்த பாம்பு விஷமற்ற அரிதாக தென்படும் மரபணு குறைபாடுடைய வெள்ளி கோல் வரையான் பாம்பு என்பது தெரிய வந்தது. இதனை ஓநாய் பாம்பு என்று அழைக்கின்றனர்.

வழக்கமாக வெள்ளிக் கோள் வரையான் பாம்புகள் உடல் மீது கட்டுக்கட்டாக தழும்பு பட்டைகள் இருக்கும். மரபணு குறைபாட்டுடன் உள்ள வெள்ளிக்கோல்வரையான் பாம்புகளின் உடலில், தழும்புகள் இல்லாமல் தோல் உரித்தது போல உலாவும். இது அரிதாகத் தென்படும்.  

இந்த நிலையிலே, கோவையில் மரபணு குறைபாடுள்ள வெள்ளிக்கோல்வரையான் பாம்பு, தென்பட்டிருக்கிறது.

இந்த பாம்பு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe