மதுகுடிக்க பணம் கேட்டு கோவையில் டாஸ்மாக் ஊழியரிடமே வழிப்பறி!

published 8 months ago

மதுகுடிக்க பணம் கேட்டு கோவையில் டாஸ்மாக் ஊழியரிடமே வழிப்பறி!

கோவை: திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் ராஜேந்திரன்(58). இவர் கோவையில் தங்கி குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் ராஜேந்திரன் குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மது குடிக்க பணம் தருமாறு ராஜேந்திரனிடம் கேட்டனர்.

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் பீர்பாட்டிலால் அவரை மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 400 ஐ பறித்து சென்றனர்.

இது குறித்து ராஜேந்திரன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் மிரட்டி பணம் பறித்தது குனியமுத்தூரை சேர்ந்த கூலி தொழிலாளி பைசல் ரகுமான்(26) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருடன் பணம் பறிப்பில் ஈடுபட்ட மற்றொரு வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe