சாக்கடையில் பெண் தவறி விழுந்த விவகாரம்: கோவை மாநகராட்சி அதிரடி!

published 8 months ago

சாக்கடையில் பெண் தவறி விழுந்த விவகாரம்: கோவை மாநகராட்சி அதிரடி!

கோவை: கோவையில் திறந்து வைக்கப்பட்ட பாதாள சாக்கடையில் குழியில் பெண் தவறி விழுந்து காயமடைந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காந்திபுரம் நூறடி சாலையில் இருபுறமும் அமைந்துள்ள கடைகளின் முன்புறமும் பாதாள சாக்கடை  அமைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டது. ஆனால், தூர்வார திறக்கப்பட்ட பாதாள சாக்கடை மீண்டும் மூடப்படவில்லை.

இதனிடையே அவ்வழியாக நடந்து சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

பெண் சாக்கடை குழியில் விழுந்த வீடியோ வைரலாகி பேசுபொருளானது. இதனிடையே, அஜாக்கிரதையாக செயல்பட்ட மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe