பெண்ணை பார்க்க சென்ற வாலிபர் மீது தாக்குதல்

published 8 months ago

பெண்ணை பார்க்க சென்ற வாலிபர் மீது தாக்குதல்

கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(40). தொழிலாளி. இவர் கடந்த 15ம் தேதி அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அந்த பெண்ணின் வீட்டு முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஏன் இங்கே நிற்கிறாய்? என கேட்டு மகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதில், வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி மகேந்திரனை சரமாரியாக தாக்கினார். இதில் கீழே விழுந்ததில் அவர் மயக்கமடைந்தார்.

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மகேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe