கோவையில் காட்டு யானை தாக்கிய மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

published 7 months ago

கோவையில் காட்டு யானை தாக்கிய மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

கோவை: கோவை அடுத்த தொண்டாமுத்தூரை அருகே அட்டுகள் பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு வனப் பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க போது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் காயம் அடைந்தார். 

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின் வனப் பணியாளர்கள் ரங்கசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்தவரை காட்டு யானை தாக்கியது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe