கோவையில் வாலிபரை தனியாக வரவழைத்து வழிப்பறி!

published 7 months ago

கோவையில் வாலிபரை தனியாக வரவழைத்து வழிப்பறி!

கோவை: கோவையில் ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் பழகி வாலிபரை தனியாக வரவழைத்து பைக், செல்போன், பணம் பறித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் கோவை துடியலூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். இந்நிலையில், சம்பவத்தன்று இருவரும் கவுண்டர் மில் பகுதி சேரன் நகரில், தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அங்கு 25 வயது வாலிபர் தனது பைக்கில் சென்றார்.

அங்கு அவரை வர சொன்ன வாலிபருடன், மேலும் ஒருவர் நின்றிருந்தார். இருவரும் பீர்பாட்டிலை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பைக், செல்போன் மற்றும் ரூ. 5,300 ஐ பறித்து மிரட்டி சென்றனர்.

இது குறித்து அந்த வாலிபர் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், பைக், செல்போன் பறித்தது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவை ஐடிஐ-யில் படிக்கும் 17 வயது மாணவர், மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் என்பது என தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe