கோவையில் பா.ஜ.க-வினர் 514 பேர் மீது வழக்குப்பதிவு

published 7 months ago

கோவையில் பா.ஜ.க-வினர் 514 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் பாஜ-வினர் 514 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை விகேகே மேனன் ரோட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு பாஜக-வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாராய பாக்கெட் மாதிரிகளை பெண்கள் மாலையாக அணிந்தும், பாடை கட்டியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

போலீசாரின் அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்ப்பாட்டம் நடத்தியது, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளில் காட்டூர் போலீசார் 106 பெண்கள் உட்பட பாஜ நிர்வாகிகள், தொண்டர்கள் என மொத்தம் 514 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe