பாக்கெட் சாராயம் என்ற அரக்கனே உயிரிழப்புக்கு காரணம்- களிமண் சிலையால் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கலைஞர்...

published 7 months ago

பாக்கெட் சாராயம் என்ற அரக்கனே உயிரிழப்புக்கு காரணம்- களிமண் சிலையால் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கலைஞர்...

கோவை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசின் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர் "பாக்கெட் சாராயம் என்ற அரக்கனே உயிரிழப்புக்கு காரணம்" என்ற தலைப்பில் களிமண் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

களிமண்ணை கொண்டு இறந்தவர்களின் கால்களை கயிறு போட்டு கட்டி இருப்பது போல் சிலையை வடிவமைத்துள்ள அவர், ஒரு காலில் பெண்களின் மாதிரி தாலியும் ஒரு காலில் குங்கும பொட்டையும் வைத்து இரு கால்களை இணைத்து கட்டும் கயிற்றில் மாதிரி சாராய பாக்கெட்டை கட்டி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் குடும்பத்திற்காக வாழ வேண்டுமெனவும், சுயநலத்திற்காகவும் தனது இன்பத்திற்காகவும் மது அருந்த கூடாது என வலியுறுத்தி உள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe