கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்...

published 7 months ago

கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் துணை ஆணையர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்,

கோவை மாவட்டத்தில் விபத்து நடைபெறுவதாக அடையாளம் காணப்பட்ட இடங்களை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கொண்ட குழுவினர் கூட்டாய்வு செய்து, விபத்துகள் நிகழாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட்பெல்ட்டும் கட்டாயம்
அணிய வேண்டும்.

வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டுபிரசுரங்கள், ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தேவையான இடங்களில் குறுகிய சாலையை அகலப்படுத்துதல், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரிசெய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முக்கியமான சாலை வளைவுகளில் வேகத்தடுப்பான்கள் அமைத்தல், சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர்களை பாதசாரிகள் கடந்த செல்லாதவாறும் தடுப்புசுவர்களை இடைவெளியின்றி அமைத்தல் உள்ளிட்டப் பணிகளை சம்மந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe