கோவையில் பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்க தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்- போலீஸ் கமிஷனர் துவக்கி வைப்பு…

published 7 months ago

கோவையில் பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்க  தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம்-  போலீஸ் கமிஷனர் துவக்கி வைப்பு…

கோவை: பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் துறை சார்பில், அவிநாசி ரோட்டில் உள்ள மாநகர பிஆர்எஸ் வளாகத்தில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.

 

அப்போது காவலர்களுக்கான மலிவு விலை அங்காடிக்கு வந்த காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இயந்திரத்தில் 10 ரூபாய் காயின் செலுத்தி மஞ்சப்பையை பெற்றனர். நிகழ்ச்சியில் வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மெஷினையும் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். 

இதில், கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் மற்றும் காவலர்கள், காவலர் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe