சரவணம்பட்டியில் 200 கிலோ செம்பு கம்பிகள் அபேஸ்!

published 7 months ago

சரவணம்பட்டியில் 200 கிலோ செம்பு கம்பிகள் அபேஸ்!

கோவை: கோவை சத்தி ரோடு அத்திபாளையம் பிரிவை சேர்ந்தவர் புவனேஷ்வரன்(58). இவர் அதே பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தொழிற்சாலையை பூட்டி சென்றார். பின்னர் நேற்று திறக்க சென்றார். அப்போது கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைத்திருந்த சுமார் 200 கிலோ செம்பு கம்பிகள் திருடு போயிருந்தது. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

இது குறித்து புவனேஷ்வரன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe