மேயர் குறித்து கேள்வி; கோவையில் தி.மு.க-அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்!

published 7 months ago

மேயர் குறித்து கேள்வி; கோவையில் தி.மு.க-அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்!

கோவை: மேயர் ராஜினாமா குறித்து கேள்வியெழுப்பியதால் கோவை மாமன்ற கூட்டத்தில் தி.மு.க-அ.தி.மு.க கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை மேயர் கல்பனா கடந்த வாரம் உடல் நிலையைக் காரணம் காட்டி ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ராஜினாமா கடிதம் தொடர்பான சிறப்புக்கூட்டம் கோவை மாநகராட்சி அலுவலக மாமன்ற கூடத்தில் நடைபெற்றது.

துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மேயர் எந்த காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்று அ.தி.மு.க கவுன்சிலர் கேள்வியெழுப்பினர். இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அ.தி.மு.க, ஆட்சியில் மேயராக இருந்த செ.ம.வேலுசாமி ராஜினாமா செய்ததை நாங்கள் கேட்டோமா என மேயர் வெற்றிச்செல்வன் தி.மு.க, கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டு கூட்டம் அவசர அவசரமாக 9 நிமிடங்களிலேயே முடிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe