கோவையில் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தவரின் பணம் அபேஸ்!

published 7 months ago

கோவையில் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தவரின் பணம் அபேஸ்!

கோவை: கோவை பிஎன் புதூர் கோபால் நகரை சேர்ந்தவர் விஷ்வநாதன்(51). இவர் நேற்று ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் விஷ்வநாதனிடம் பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியை காட்டி மிரட்டி விஷ்வநாதனிடம் இருந்த ரூ. 5 ஆயிரத்தை பறித்து பைக்கில் தப்பினர்.

இது குறித்து விஷ்வநாதன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், பணம் பறித்தது ஆர்.எஸ்.புரம் ராயப்பபுரத்தை சேர்ந்த பிரில்(34), கேகே புதூரை சேர்ந்த ஜான் பாஷா(37) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe