போலி பில் தயாரித்து தனியார் நிறுவனத்தில் ரூ.41.17 லட்சம் கையாடல்: மேலாளர் மீது வழக்கு…

published 7 months ago

போலி பில் தயாரித்து  தனியார் நிறுவனத்தில் ரூ.41.17 லட்சம் கையாடல்: மேலாளர் மீது வழக்கு…

கோவை: போலி பில் தயாரித்து தனியார் நிறுவனத்தில் ரூ. 41.17 லட்சம் கையாடல் செய்த மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

கோவை செட்டி வீதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பவானியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் கிளை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் கணக்கு, தணிக்கை நடந்தது. இதில், நிறுவனத்தில் ரூ.41.17 லட்சம் கையாடல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. 

கிளை மேலாளர் ஸ்ரீதர் போலி பில் தயாரித்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதுகுறித்து நிர்வாகம் சார்பில் கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe