பார்சலில் போதைப்பொருள்-இன்ஜினியரிடம் ரூ.8 லட்சம் மோசடி…

published 7 months ago

பார்சலில் போதைப்பொருள்-இன்ஜினியரிடம் ரூ.8 லட்சம் மோசடி…

கோவை: பார்சலில் போதைப்பொருள் அனுப்பியுள்ளதாக கூறி கோவை இன்ஜினியரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை பீளமேடு நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் விஷால் (25). ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரின் செல்போன் எண்ணிற்கு ஒரு வாய்ஸ் கால் வந்தது. அதில் பேசிய நபர், ‘‘நீங்கள் மும்பையில் இருந்து ஈரானிற்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கிறீர்கள். அதில் 4 காலாவதியான ஈரான் பாஸ்போர்ட், 3 வங்கி கடன் அட்டை, 750 கிராம் உயர் ரக போதை பொருட்கள் இருக்கிறது. 

இந்த விவகாரம் சுங்க துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் வைத்து இந்த போதை பொருட்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய போகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்கலாம். ஆனால் அதற்கு ஆதார் கார்டு மற்றும் வங்கி விவரங்கள் தெரிவிக்க வேண்டும்’’ என்றார். 

இதை நம்பிய விஷால், தனது ஆதார் எண், வங்கி விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து அவரின் வங்கிக்கணக்கில் இருந்த 8 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த விஷால் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் தந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe