கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

published 7 months ago

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கோவையில் இன்று காலையில் வெயில் சுட்டெரித்து வந்தது. மதியத்திற்கு மேல் வானம் கருமேகங்களுடன் காணப்பட்டதை தொடர்ந்து மாலை கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

உக்கடம், ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம் அண்ணா சிலை, ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடையை பிடித்தப்படி சென்றனர்.

காலையிலிருந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலையில் பெய்த மழை குளிர்ச்சியான சூழலை  ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe