தபால் துறையில் வேலை: 44,228 பணியிடங்கள்... 10ம் வகுப்பு தகுதி போதும்!

published 7 months ago

தபால் துறையில் வேலை: 44,228 பணியிடங்கள்... 10ம் வகுப்பு தகுதி போதும்!

இந்திய தபால் துறையின் கீழ் செயல்பட்டு  வரும் தபால் அலுவலகங்களில் தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகி உள்ளது.
மொத்தம்  44,228   காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழ்நாட்டில்  3,789 பணியிடங்கள் 
நிரப்பப்படும்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். தபால் அலுவலர் பணிக்கு ரூ.12,000 – 29,380 வரையும்,  உதவி தபால் அலுவலர்  பணிக்கு  ரூ.10,000 – 24,470 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

இந்த பணியிடங்களுக்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம்  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2024 ஆகும்.

பணியிடங்கள்  தொடர்பாக மேலும் தகவல்கள்  அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe