கோவையில் பட்டியல் இன இளைஞர் அடித்துக் கொலை- 10 பேருக்கு இரட்டை ஆயுள்- நீதிமன்றம் உத்தரவு…

published 7 months ago

கோவையில் பட்டியல் இன இளைஞர் அடித்துக் கொலை- 10 பேருக்கு இரட்டை ஆயுள்- நீதிமன்றம் உத்தரவு…

கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு, தாமரைக் கண்ணன் என்ற பட்டியல் இன இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட மோதல்  காரணமாக, தாமரை கண்ணன் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞரை, 14 பேர் அடித்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கில் கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி வழக்கில் தொடர்புடைய 12 பேரில் 10 பேருக்கு இரட்டை  ஆயுள் தண்டனையும், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டணையும்  வழங்கி உத்திரவிட்டார்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேரில் விஜய் என்பவர் விடுதலை செய்யப்பட்டார்.
 

ஜெயசிங் என்பவர் வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது உயிரிழந்தார்.
விக்கி ,மகேந்திரன், கார்த்திக் ,கவாஸ்கான், சுரேஷ் ,பிரகாஷ் ,நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இரண்டு பேருக்கு ஒற்றை ஆயுள் தண்டனை விதித்து கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe