கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

published 2 years ago

கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

கோவை. ஆகஸ்ட், 8-

தமிழக கேரள எல்லையான கே.ஜி.சாவடியில் வட்ட வழங்கல் துறை பறக்கும்படை தாசில்தார் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளைப் பார்த்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

 அதிகாரிகள் வேனை திறந்து பார்த்த போது அதில் 3 டன் ரேசன் அரிசி இருந்தது. அரிசியைச் சட்ட விரோதமாக வாங்கி அதனைக் கேரள மாநிலத்துக்குக் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் லோடு வேன், 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe