கோவையில் வாகன சோதனையில் போலீஸ்காரர் மீது தாக்குதல்!

published 6 months ago

கோவையில் வாகன சோதனையில் போலீஸ்காரர் மீது தாக்குதல்!

கோவை: கோவை அருகே உள்ள தடாகம் ரோடு கோவில் மேடு நான்கு ரோடு சந்திப்பில் நேற்று இரவு சாய்பாபா காலனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் ஏட்டு பூபாலன் மற்றும் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சரிபார்த்தனர்.

அப்போது பைக்கில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி ஆவணங்களை காட்டும் படி கூறினர். அப்போது போலீசாருக்கும், பைக்கில் வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி போலீஸ் ஏட்டு பூபாலனை தாக்கி தள்ளிவிட்டதாக தெரிகிறது.

இதில் அவர் ரோட்டில் விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் ஏட்டு பூபாலனை தள்ளிவிட்ட கட்டிட தொழிலாளிகள் திண்டுக்கல் கோவாக்காப்பட்டியைச் சேர்ந்த நாகராஜன்(31), கரூர் அருகே உள்ள காளப்பட்டியைச் சேர்ந்த இளங்கோ(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe