கோவையில் ஆட்டோ ஒர்க்‌ஷாப்பில் விபத்து; இன்ஜினியர் பலி

published 6 months ago

கோவையில் ஆட்டோ ஒர்க்‌ஷாப்பில் விபத்து; இன்ஜினியர் பலி

கோவை: கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் ஆட்டோ ஒர்க்ஷாப் உள்ளது. இங்கு கணபதி மணியக்காரன் பாளையம் பாலமுருகன் நகரை சேர்ந்த யோக தாஸ்(39) என்பவர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று யோகதாஸ் ஆட்டோ ஒர்க்ஷாப்பில் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மேலே இருந்து கீழே தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி வெங்கடேஸ்வரி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe