பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

published 6 months ago

பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

கோவை: கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டை சேர்ந்தவர் புனிதாவதி(57). வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று வேலை முடிந்து அவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

ஜி.கே.எஸ் ரோட்டில் சென்ற போது அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த புனிதாவதி இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து தப்பிய பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் யோகேஷ்(35). பிஇ பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுகன்யா(35). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில், யோகேஷ் போதிய வருமானம் இல்லாமல் குடும்ப நடத்த சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை நினைத்து அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்தார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த யோகேஷ் நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe