கோவையில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை; 26 வயது வாலிபர் கைது!

published 6 months ago

கோவையில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை; 26 வயது வாலிபர் கைது!

கோவை: கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் வசிப்பவர் 28 வயது இளம்பெண். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

ஆனால் கணவருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு 26 வயதான நபருடன் நட்பு ஏற்பட்டது. அந்தப் பெண் தன்னைவிட வயது குறைந்த வாலிபரிடம் தோழியாக பழகினார். ஆனால் வாலிபர் அதை பயன்படுத்தி அவரிடம் தவறாக நடக்க முடிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வருத்தம் அடைந்த அந்தப் பெண் அவரை விட்டு விலகிச் சென்றார். ஆனாலும் வாலிபர் அவரை தொடர்ந்து செல்போனில் அழைத்தார். தன்னுடன் இருக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.

சம்பவத்தன்று அந்தப் பெண் தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது வாலிபர் அங்கு சென்று அவரை கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் உக்கடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் வாலிபர் மீது இளம்பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக பெண் கொடுமை சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe