மகளிர் விடுதியில் செல்போன்களை திருடிய வாலிபர் சிக்கினார்…

published 6 months ago

மகளிர் விடுதியில் செல்போன்களை திருடிய வாலிபர் சிக்கினார்…

கோவை: கோவை சாயிபாபா காலனி அழகேசன் ரோட்டில் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில், ஒரே அறையில் தங்கி உள்ள 3 பெண்கள் சம்பவத்தன்று இரவு கதவை பூட்டாமல் தூங்க சென்றனர். 

மறுநாள் காலையில் எழுந்தபோது 3 செல்போன்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில், செல்போன்களை திருடி சென்றது ஒடிசாவை சேர்ந்த சாயிபாபா காலனியில் தங்கி சமையல் வேலைக்கு செல்லும் பினோத்(23) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe