கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்பாட்டம்...

published 6 months ago

கோவையில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்பாட்டம்...

கோவை: ஆந்திராவில் வழங்கும் சலுகைகள் போல் தமிழகத்தில் வழங்க வேண்டும் என ஆட்டோவுடன் வந்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்பாட்டதில்  ஈடுபட்டனர்.

ஆட்டோ தொழிலாளர்கள் இறந்து போனால் அவரது  குடும்பத்தில்  ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம்  சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..



இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக  இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பாக கோவை குசெஞ்சிலுவை சங்கம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில்,ஓலா ஹீப்பர்
போன்ற வாகனங்களால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,எனவே அவைகளை முறைப்படுத்த வேண்டும்.ஆட்டோ டிரைவர்களின் FCக்கு ஆந்திராவில் வழங்குவது போல் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.ஆட்டோ தொழிலாளர்கள் இறந்து போனால் அவரது  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்படுவதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அந்த நிலையை உடனே காவல்துறை கைவிட வேண்டும் உள்ளிட்ட 
பல்வேறு  கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது..இதில், 200 க்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe