சுதந்திர தினவிழா- இந்திய வரைபடம் போன்று நின்று வியப்படைய செய்த கோவை மாணவர்கள்...

published 6 months ago

சுதந்திர தினவிழா- இந்திய வரைபடம் போன்று நின்று வியப்படைய செய்த கோவை மாணவர்கள்...

கோவை: பிரிந்து கிடந்த 17  இந்திய மாகாணங்கள் ஒருங்கிணைந்த இந்தியாவாக மாறிய வரலாற்றை தத்ரூப ஓவியமாக நாடக  அணிவகுப்பு நடத்திய கோவையை சேர்ந்த  பள்ளி மாணவர்களின் கழுகு பார்வை காட்சி பார்ப்போரை வியப்படைய செய்தது.


இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் மக்கள்   கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் மாவட்டம் கோவைப்புதூர்  பகுதியில் உள்ள  ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒருங்கிணைந்த இந்தியா உருவான வரலாற்றை கூறும் நாடக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.


இதில் இந்தியா  சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில் பல்வேறு  பிரேதேசங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தைதை போல குழுவாக மாணவர்கள் பிரிந்து நின்றனர். "பிரித்தானியாவின் இந்தியா" என வரலாற்றில் கூறப்பட்ட  காலத்தில் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் ஆகியோர் இணைந்து மாநிலங்களை இணைப்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து,  பிரிந்து கிடந்த 17  மாநிலங்கள்  இணைந்து இந்தியாவாக மாறியதை தனி தனி குழுவாக நின்ற   மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக இணைந்து ஒருங்கிணைந்த இந்திய வரைபடமாக நின்றனர்.
 

தொடர்ந்து தேசிய கொடி வண்ணங்களை கைகளில் பிடித்தபடி நின்ற மாணவர்களின் அணிவகுப்பு தத்ரூப  இந்திய வரைபடமாக காட்சியளித்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe