கோவையில் தொழிலாளி மர்ம சாவு- கொலையா? போலீசார் விசாரணை…

published 6 months ago

கோவையில் தொழிலாளி மர்ம சாவு-  கொலையா? போலீசார் விசாரணை…

கோவை: கோவை பீளமேடு சவுரிபாளையம் மெயின்ரோடு கருணாநிதி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன்(42). கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியம். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

இந்நிலையில், நேற்று அதிகாலை சண்முகநாதன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாக்கியம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனால் பதறிய சண்முகநாதனின் சகோதரர் கேசவன் மற்றும் சகோதரி மகாலட்சுமி ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சண்முகநாதனின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

அப்போது சண்முகநாதனின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து மகாலட்சுமி பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து மகாலட்சுமி அளித்த புகாரில், எனது சகோதரர் சண்முகநாதனின் சாவில் மர்மம் உள்ளது. அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதால் கொலை செய்திருக்கலாம்? என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், பீளமேடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இருப்பினும், பிரேத பரிசோதனை முடிவில் தான் இது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe