தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

published 6 months ago

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

கோவை: உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு (27.09.2024) சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலா தொழிலில் ஈடுபடுவோர்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்படுகிறது. 

இந்த விருதுகள் சுற்றுலாத்தொழிலில் ஈடுபடுவோரையும், தமிழ்நாட்டில் சுற்றுலா தொடர்புடைய தொழிலில் ஈடுபடுவோரை சுற்றுலா பயண முகவர்கள் ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.

சுற்றுலா ஆப்ரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சாகச சுற்றுலா, சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா விளம்பர பொருள் போன்ற 17 வகையான (17 Categories) சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் சார்ந்தவர்களும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27-09-2024) சென்னையில் வழங்கப்படும். 
அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 22-08-2024 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe