கோவையில் கேட்டை திறந்து உள்ளே வந்த ஒற்றை காட்டு யானை...

published 6 months ago

கோவையில் கேட்டை திறந்து உள்ளே வந்த ஒற்றை காட்டு யானை...

கோவை: கோவை, ஆலந்துறை அடுத்த இருட்டு பள்ளம் பகுதியில் விவசாய தோட்டங்களில் பணி புரியும் கூலித் தொழிலாளர்கள் தங்க ஓட்டு வீடுகள் உள்ளது. 

அங்குள்ள ஒரு தோட்டத்துக்குச் செல்லும் இரும்புக் கதவை திறந்து உள்ளே வர முயன்ற ஒற்றை காட்டு யானை. வாகனத்தில் சத்தத்தைக் கேட்டு திரும்பிச் சென்று மீண்டும், மீண்டும் அங்கு வந்தது. உணவு, தண்ணீர் தேடி இரவு நேரங்களில் காட்டு யானைகள் அலைவதால் அப்பகுதிகளில் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
 

இந்நிலையில் நேற்று இரவு ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம் துணைத் தலைவர் ராஜேந்திரன், பிரகாஷ் மற்றும் வேலுச்சாமி என்பவர்கள் தோட்டங்களில் உள்ள ஓட்டு வீடுகளில் உணவு தேடி சென்று உள்ளது ஒற்றைக் காட்டு யானை. மேலும் அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழைத், தென்னை பாக்கு போன்ற பயிர்களை சேதத்தை ஏற்படுத்தி சென்று உள்ளது 

அந்த காட்டு யானை. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் அங்கு வனத்துறை செல்வதற்கு முன் காட்டுப் பகுதிக்குள் சென்றது அந்த ஒற்றைக் காட்டு யானை.

வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து மனித - விலங்கு மோதலை தடுத்தும், பயிர்களை பாதுகாத்து வரும் சூழ்நிலையில், ஒன்று அல்லது  இரண்டு, மூன்று மற்றும் கூட்டத்துடன் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள யானைகள் அவ்வப் போது ஊர்களுக்கும், விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. 

இதனை தடுக்க அரசு மற்றும் வனத் துறையினர் நிரந்தர தீர்வு கண்டால் மட்டுமே அப்பகுதி மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் மற்றும் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை ஏற்படும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/DywSIsugodI

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe