கோவையில் குரங்கு குட்டியை வளர்த்த கணவன் மனைவி கைது...

published 6 months ago

கோவையில் குரங்கு குட்டியை வளர்த்த கணவன் மனைவி கைது...

கோவை: கோவை வன சரகம், தடாகம் சுற்றுக்கு உட்பட்ட காட்டூர், நஞ்சப்பா சாலையில் குடியிருந்து வருபவர்கள் பெருமாள்,  சகுந்தலா தம்பதியினர். 

இவர்கள் வீட்டில் குரங்கு வளர்ப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்று வனத் துறையினர் பார்த்த போது சுமார் இரண்டு மூன்று மாதங்களான குரங்கு குட்டி கடந்த ஒரு மாத காலமாக கூண்டில் வைத்து வளர்த்து வந்தது தெரிய வந்தது. 

இதனை அடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அந்தக் குரங்கு குட்டியை தேனி மாவட்டத்தில் ஒருவரிடம் ரூபாய் 5,000 கொடுத்து விலைக்கு வாங்கி வந்ததாக தெரிவித்து உள்ளனர். 

அதனை மீட்ட வனத் துறையினர் மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தில் தற்பொழுது பராமரித்து வருவதாகவும், அது மனிதர்களுடன் இருந்ததால் கூட்டத்துடன் இணைவது கடினம் என தெரிவித்துள்ள வனத்துறையினர் மேலும்  வனப்பகுதியில் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைக்கு அந்த குட்டி குரங்கு வந்த பிறகு அதனை வனப்பகுதிக்குள் விடுவிப்பதாகவும், அதுவரை வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து கணவன் பெருமாள், மனைவி சகுந்தலா மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe