கரம் கொடுத்த கோவை விமானப்படை வீரர்கள்!

published 6 months ago

கரம் கொடுத்த கோவை விமானப்படை வீரர்கள்!

கோவை: சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் சார்பாக வயநாடு இயற்கை பேரிடருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 119 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில் உள்ளது. இந்த பேரிடரால் ஆயிரக்கணக்கான மக்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. இதனிடையே, சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் சார்பாக வயநாடு இயற்கை பேரிடருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சூலூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹக்கீம், பொதுச் செயலாளர் ரமேஷ்குமார் பொருளாளர் தேனப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியம், தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, வயநாடு விமானப் படை சங்க உறுப்பினர்களான லாசர், கிருஷ்ணன் குட்டி மற்றும் அப்துல் ஹசீஸ் ஆகியோரிடம் ரூ.75,000 நிவாரணத் தொகையை வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe