செல்பி எடுக்க முயன்று ரயிலில் சிக்கிய நபர்; கோவையில் பரிதாபம்!

published 6 months ago

செல்பி எடுக்க முயன்று ரயிலில் சிக்கிய நபர்; கோவையில் பரிதாபம்!

கோவை: கோவை ரத்தினபுரி புதுப்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் நேற்று முன்தினம் ஒருவர் ரயில் மோதி பலியாகி கிடந்தார்.

இதனைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், ரயில் மோதி பலியானது ரத்தினபுரியை சேர்ந்த மோட்டார் ரீவைண்டிங் தொழிலாளி சிவதாசன்(51) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்தே பாரத் ரயில் வரும்போது தண்டவாளம் அருகே நின்று செல்பி எடுக்கும் முயன்ற போது எதிர்பாராத விதமாக ரயில் மோதி பலியானதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோவை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe