பைக் மெக்கானிக்கிடம் பணம் பறித்த 2 பேர் கைது…

published 5 months ago

பைக் மெக்கானிக்கிடம் பணம் பறித்த 2 பேர் கைது…

கோவை: கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜன்(52). டூவீலர் மெக்கானிக். இவர் நேற்று நல்லாம்பாளையம் அம்மையப்பர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது எதிரே வந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் இருவரும் அவரை மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ. 400 ஐ பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து ராஜன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் பறித்தது கவுண்டம்பாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ஜானகிராமன்(27), கவுண்டம்பாளையம் சாமூண்டீஸ்வரி நகரை சேர்ந்த ரமேஷ்குமார்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe