கோவை பூம்புகார் விற்பனையகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை...

published 5 months ago

கோவை பூம்புகார் விற்பனையகத்தில்  சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை...

கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் அங்காடியான பூம்புகார் விற்பனையகம் இயங்கி வருகிறது.  கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு  கிருஷ்ணர் சிலைகள்  விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூம்புகார் விற்பனையகத்தின் மேலாளர் ஆனந்தன் விற்பனையகத்தை மூடிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் விற்பனையகத்தை திறக்க வரும்பொழுது விற்பனையாகத்தின்  கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. 

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக விற்பனையகத்தை திறந்து பார்க்கும் பொழுது கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 44 ஆயிரத்து 877 ரூபாய் விற்பனை செய்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe