கோவையில் பா.ஜ.க நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

published 5 months ago

கோவையில் பா.ஜ.க நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். பா.ஜ.க ஆர்.எஸ்.புரம் பகுதி இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.

இவர் பூ மார்க்கெட் பகுதியில உள்ள தனது அலுவலகத்தில் அவர் இருந்த போது,  நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து அவரை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். மேலும் இத்தாக்குதலில் அவர் கைகளிலும் இரண்டு மணிக்கட்டுகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர் மீட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் ஆர்.எஸ்.புரத்தில் மற்றொரு கும்பலுடன் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடைபெற்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து  ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சரவணன், வேலு ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe