கோவை விமான நிலையத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு சிறப்பு மரியாதை…

published 5 months ago

கோவை விமான நிலையத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு சிறப்பு மரியாதை…

கோவை:கோவை விமான நிலையத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு உறவினர்கள் பண மாலை அணிவித்து சிறப்பு மரியாதை செய்தனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா, கோவை விமான நிலையத்தில் Attender ஆக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெற்றார்.

மல்லிகா தனது 28 ஆண்டு கால பணி வாழ்க்கையில் மும்பை மற்றும் கோவை விமான நிலையங்களில் பணியாற்றி உள்ளார். அவரது ஓய்வு பெறும் நாளன்று, உறவினர்கள் கோவை விமான நிலையத்திற்கே நேரில் வந்து, மல்லிகாவிற்கு பண மாலை அணிவித்து சிறப்பு மரியாதை செய்தனர்.

இந்த அன்பான செயல் மல்லிகாவின் நீண்ட கால சேவையை அங்கீகரிப்பதாகவும், அவரது உழைப்பிற்கு மதிப்பு அளிப்பதாகவும் அமைந்தது. விமான நிலையத்தில் இருந்து மல்லிகாவை உறவினர்கள் மரியாதையுடன் அழைத்துச் சென்றனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/fXFbMHfwGhI?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe