விண்வெளியில் பறந்த முதல் இந்திய வீரர் கோவை வருகை...

published 2 weeks ago

விண்வெளியில் பறந்த முதல் இந்திய வீரர் கோவை வருகை...

கோவை: இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்தும் விதமாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள  எஸ்எஸ்விஎம்  பள்ளியில் டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024 எனும் கருத்தரங்கம் நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய முன்னாள் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா,

விண்வெளிப் பயணங்கள்
நாம் பூமிக்கு அப்பால் செல்லும்போது,நாம் பிரபஞ்சத்தை ஆராய்வது மட்டுமல்லாமல் மனித ஆற்றலின் எல்லைகளைத் தள்ளுகிறோம்.விண்வெளி ஆய்வு என்பது அறிவியல் முயற்சியை விட அதிகம்,இது நமது இடைவிடாத அறிவின் நாட்டத்திற்கும்,மனிதகுலத்தை உயர்த்துவதற்கான நமது கூட்டு அபிலாஷைக்கும் ஒரு சான்றாகும்.நட்சத்திரங்களை நோக்கிய இந்தியாவின் பயணம்,நமது தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக உதவுகிறது. எந்த கனவும் மிகப் பெரியது அல்ல, எந்த சவாலும் மிகப் பெரியது அல்ல என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe