குழந்தை இல்லாத ஏக்கத்தில் கோவையில் பெண் விபரீத முடிவு

published 2 weeks ago

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கோவையில் பெண் விபரீத முடிவு

கோவை: கோவை மாவட்டம் கஸ்தூரி நாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் மனைவி அனிதா(33). இவர் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார்.

இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக அனிதா கடும் மன உளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe