வேளாண் பல்கலையில் உழவர் தின விழா கண்காட்சி துவக்கம்- செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து அமைச்சர் முத்துச்சாமி கருத்து...

published 4 months ago

வேளாண் பல்கலையில் உழவர் தின விழா கண்காட்சி துவக்கம்- செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்து அமைச்சர் முத்துச்சாமி கருத்து...

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா இன்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியை தமிழ்நாடு வேளாண் துறை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி புதிய பயிர் ரகங்களின் செயல் விளக்க திடல்கள் மற்றும் பண்ணை இயந்திரங்கள்  கண்காட்சி   பார்வையிட்டார்.

பின்னர் செய்தியார்களை சந்தித்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பேகம்போது;

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து இருப்பது நல்ல செய்தி. இன்றைக்கு காலை அந்த செய்தி கிடைத்து இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று. உச்ச நீதிமன்றம் இதில் சரியாக ஒரு முடிவாக நல்ல முடிவாக கொடுத்து உள்ளது. நிச்சயமாக மிகப்பெரிய மகிழ்ச்சிக்குரிய செய்தியாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இதற்கு முன்னால் பல சிரமங்களும், தேவை இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்வர் டெல்லி செல்வது என்பது வேறொரு நிகழ்ச்சிக்காக.

இதை ஒரு வெற்றி மகிழ்ச்சியான செய்தியாக கருதுகிறோம்.

அவருக்கான அமைச்சர் பொறுப்பு குறித்து தலைமை தெரிவிக்கும். எங்களைப் பொறுத்த வரை இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக வந்து உள்ளது. தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து தலைமையும் முதலமைச்சரும் முடிவெடுப்பார்கள்.

விவசாயிகளுக்கு பயனு உள்ள வகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான உழவர் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe