நாளை கோவை மாநகராட்சி பகுதியில் இறைச்சி கடைகள் செயல்படாது- மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆணையாளர் எச்சரிக்கை...

published 4 months ago

நாளை கோவை மாநகராட்சி பகுதியில் இறைச்சி கடைகள் செயல்படாது- மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்  ஆணையாளர் எச்சரிக்கை...

கோவை: காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, நாளை 02.10.2024 புதன்கிழமை அன்று தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படியும்  உக்கடம், சக்திரோடு மற்றும் போத்தனூர் ஆடு/மாடு அறுவைமனைகளும் செயல்படாது எனவும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவினை மீறி செயல்படும் கடைகளின் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் இரத்து போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe